சாராயம் கடத்திய வாலிபர் கைது

திருமருகல் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-19 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே மேலப்பூதனூர் பகுதியில் திருக்கண்ணபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர் கீழ்வேளூர் ராயத்தமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஏசுதாஸ் மகன் ஆகாஷ் (வயது 20) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்