மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-07 19:45 GMT

திண்டுக்கல் அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. நேற்று அவர் நல்லாம்பட்டி காவேரி நகர் பகுதியில் தனியார் கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு பணியின்போது மின்சாரம் தாக்கியதில் பிரபாகரன் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Tags:    

மேலும் செய்திகள்