விபத்தில் தொழிலாளி பலி

பேரிகை அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-19 17:42 GMT

ஓசூர்:

ராயக்கோட்டை அருகே உள்ள சென்னியம்பள்ளியை சேர்ந்தவர் கண்ணுபையன் (வயது 62), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் பேரிகை -சூளகிரி சாலையில் அத்திமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்து காயம் அடைந்த கண்ணுபையன் மீது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணுபையன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்