சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம்

கிணத்துக்கடவு அருகே சரக்கு வாகனம் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-09-22 21:00 GMT

சுல்தான்பேட்டை

கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 37). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சுல்தான்பேட்டை அருகே பச்சார்பாளையத்தில் இருந்து மெட்டுவாவி நோக்கி செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தினேஷ்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்