மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-05 17:49 GMT

கீரனூர்:

கீரனூர் அருகே ஆழ்வான்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல் மகன் சதீஷ்குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர், அங்குராபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆடு வாங்குவதற்காக சென்று உள்ளனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் இருவரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்