மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் முத்துக்குமார்(வயது 31). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தியாகதுருகம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பிரிதிவிமங்கலம் புறவழிச்சாலை அருகே வந்தபோது முத்துக்குமார் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜெயப்பிரியா(27) கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.