மரக்கடையில் தீவிபத்து

விருதுநகரில் மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-22 19:16 GMT

விருதுநகர்,

விருதுநகர் பாண்டியன் நகரில் மொட்டைய சாமி என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், நிலைய தீயணைப்பு அலுவலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கொட்டகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேங்கை மரப்பலகைகள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்