பெண் மாயம்

பெண் மாயம் ஆனார்.

Update: 2023-02-12 18:59 GMT

தென்னிலை அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ரம்யா (வயது 27). இந்தநிலையில் சம்பவத்தன்று ரம்யா கள்ளக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பின்னர் மீண்டும் புளியம்பட்டிக்கும் வரவில்லை. இதையடுத்து சக்திவேல் தனது மனைவியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரின் தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்