விஷம் குடித்து பெண் தற்கொலை

சின்னசேலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-16 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே மறவாநத்தம் திருக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி சரசு (வயது 50).விவசாயி தொழிலாளி. இவருக்கு தலையில் கட்டி இருந்துள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் சம்பவத்தன்று மனமுடைந்து விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்