கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு
பூம்புகார் அருகே கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே மேலையூர் மேலவெளி பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 22-ந் தேதி விநாயகர் பூஜை, யாகசாலைபூஜைகள்,. கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்படாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.