பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் எப்போது?

பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் எப்போது என்பது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-03-25 19:02 GMT

சிவகாசி, 

பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் எப்போது என்பது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாயத்து தலைவர்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்தின் தலைவராக உசிலை செல்வம் இருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் துணைத்தலைவராக இருந்த ராஜபாண்டியன் பொறுப்பு தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

வார்டு உறுப்பினராக இருந்த லோகேஸ்வரி துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று துணைத்தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார். தற்போது பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

விரைவில் தேர்தல்

மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தேவையான உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதில் பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், சிவகாசி யூனியனில் 2-வது வார்டு உறுப்பினர் கதிரேசன் இறந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மற்றும் யூனியன் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்