பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

பெருங்குளத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-03-19 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள பெருங்குளம் பேரூராட்சி 12-வது வார்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா நேற்று பெருங்குளம் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பெருங்குளம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சண்முகத்தாய், செல்லப்பா, மாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 12-வது வார்டு செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும்மான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், பெருங்குளம் பேரூராட்சி கழக செயலாளர் வேதமாணிக்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எப்ராயீம், அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பாஸ்கர், பெருங்குளம் விவசாய சங்க தலைவர் சுடலை, போக்குவரத்து பிரிவு தூத்துக்குடி மண்டல செயலாளர் கல்விகுமார், ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை தலைவர் விஜயன், சாத்தான்குளம் யூனியன் துணை தலைவர் அப்பாதுரை, பெருங்குளம் பேரூராட்சி வார்டு செயலாளர் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெருங்குளம் பேரூராட்சி 15-வது வார்டு செயலாளர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்