வாய்மேட்டை சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்ட வாய்மேட்டை சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-08-01 17:20 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள நடந்தப்பட்ட மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆயக்காரன்புலம்-3 சேத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி கவுசிகா முதலிடம் பெற்றார். இவர் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு சென்ற இவரை விமானத்தில் பெங்களூருக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடந்த ஒலம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கவுசிகா சொந்த ஊரான வாய்மேட்டுக்கு திரும்பி வந்தார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்