பொதுமக்களுக்கு நீர்-மோர், பழங்கள்

சங்கரன்கோவிலில் பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-03-20 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், வக்கீல் சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்