வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-06-01 19:46 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டியில் வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் விஜய ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மலம்பட்டி கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கோவில் முன்பு யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து யாக வேள்விகள் நிறைவுற்று புனித கலசத்திற்கு தீபாராதனை நடத்தியும் புனிதநீர் அடங்கிய கலசங்களை கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கோவில் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு புனிதநீர் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மூலவர் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்