பெரம்பலூரில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூரில் ‘நீட்’ தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-05-23 19:47 GMT

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவரும், முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பெரம்பலூரில் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் அதிகம் உள்ளதால், மாவட்ட தலைநகர் என்ற அடிப்படையில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெருக்கடியாக உள்ள வடக்குமாதவி சாலையில் இருந்து எளம்பலூர் சாலையை உழவர் சந்தை அருகே இணைத்திட வேண்டும். துறைமங்கலத்தில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் சித்த மருத்துவர் கோசிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்