மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-24 15:43 GMT

திருவையாறு,

அரியலூர் மாவட்டம், கீழகவட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவரது மகன் அரவிந்த்(வயது 26). இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இன்று வேலை விசயமாக மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது திருவையாறு- விளாங்குடி சாலை பழைய காவல்நிலையம் அருகே செல்லும்போது பின்னால் சாத்தமங்கலம் சக்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிவந்த லாரி எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரவிந்த் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இது தொடர்பாகவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்