கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-07-11 17:22 GMT

கொல்லங்கோடு,

நித்திரவிளை போலீஸ் தனிப்படை ஏட்டு ஜோஸ் தலைமையில் போலீசார் சரல்முக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் சிறு சிறு மூடைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த அரிசி கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் காஞ்சாம்புரம் பகுதியில் ஆட்டோவில் கடத்த முயன்ற 210 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்