திருச்சி: திருவெறும்பூர் அருகே விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு - 873 காளைகள் பங்கேற்பு

16 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த மாடுபிடி வீரர் மனோஜ் என்பவருக்கு குளிர்சாதன பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2023-01-22 18:30 GMT

திருச்சி,

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் 873 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

மொத்தம் 450 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் 16 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த மாடுபிடி வீரர் மனோஜ் என்பவருக்கு குளிர்சாதன பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

அதே போல் 12 காளைகளை அடக்கி 2-வது இடத்தைப் பிடித்த ஹரி என்பவருக்கு வாஷிங் மெஷின், 10 காளைகளை அடக்கி 3-வது இடத்தைப் பிடித்த கலை மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு ஏர் கூலர் இயந்திரமும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் 6 மாடுபிடி வீரர்கள் உள்பட 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்