அய்யம்பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அய்யம்பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Update: 2023-03-12 19:32 GMT

அய்யம்பேட்டை ஒத்தை தெரு - சுண்ணாம்புக்கார தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால்குட, காவடி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து பால்குடம், சந்தனகுடம், பன்னீர் குடம், இளநீர் குடம், பஞ்சாமிர்த குடம் ஆகியவற்றை பக்தர்கள் எடுத்து மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்