பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்க்கு, வி.சிக. தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-17 14:29 GMT

சென்னை,

தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். எளிய முறையில் மலர் மாலையை தானே எடுத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது த.வெ.க.பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் , நிர்வாகிகள்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்க்கு,வி.சிக. தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்