16 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

இரவு பெய்த மழையில் 16 சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை.

Update: 2022-11-11 09:33 GMT

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது ;

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 10 நாட்களில் 485 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இரவு பெய்த மழையில் 16 சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை.

உடனே வெளியேறிவிட்டன. ஒரு சில இடங்களில் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டன. . கொளத்தூர், புளியந்தோப்பு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கவில்லை.

169 நிவாரண மையங்கள், ஒரே நேரத்தில் 2 லட்சம் உணவு பொட்டலம் தயாரிக்க சமையல் கூடங்கள் தயார்நிலையில் உள்ளன. எல்லா இடங்களிலும் தண்ணீர் இல்லை. கனமழை பெய்தாலும் சென்னையில் மழைநீர் தேங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்