திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு - போலீசார் விசாரணை

திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2023-06-18 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள சீர்ப்பணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அறந்தாங்கியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகளையும் 200 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்