கோழிப்பண்ணையில் திருட்டு

தேனி அல்லிநகரத்தில் கோழிப்பண்ணையில் திருடிய மர்ம நபர்களை தேடி போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-02-19 18:45 GMT

தேனி அன்னஞ்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 50 கிலோ இரும்பு பொருட்கள், மின்விசிறி, 3 கடப்பாரைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அழகேசன் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து பண்ணையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்