வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

எஸ்.புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-09-13 17:23 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

நகை, பணம் திருட்டு

எஸ்.புதூர் அருகே உள்ள ராஜாப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி விஜயலெட்சுமி (வயது 55). கூலி தொழிலாளி. இவர் சம்வத்தன்று வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதன் உள்ளே இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

விசாரணை

இதற்கிடையே வீட்டிற்கு சாப்பிட வீட்டுக்கு வந்த விஜயலெட்சுமி வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.

மேலும், நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் புழுதிபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்