தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம் ஆனார்.

Update: 2022-11-28 18:48 GMT

கரூர் அருகே உள்ள மணவாடி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பாண்டியனின் மனைவி கோகிலா உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் பாண்டியனை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்