விஷம் குடித்த தொழிலாளி சாவு

விஷம் குடித்த தொழிலாளி இறந்தார்.

Update: 2023-04-26 18:37 GMT

வடகாடு அருகே நெடுவாசல் கிழக்கு பகுதியில் திருஞானம் என்பவரின் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டத்திற்கு கரும்பு வெட்ட கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, நேவி நேந்தல் ஈஸ்வரன் கண்ட நல்லூர் பகுதியில் இருந்து அஞ்சாபுலி (வயது 45) என்ற தொழிலாளி சக தொழிலாளர்களுடன் வந்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கு கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அஞ்சாபுலி கரும்பு தோட்டத்தில் இருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஞ்சாபுலி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்