மது குடித்ததை மாமனார் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை மாயம்

மது குடித்ததை மாமனார் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை மாயமானார்.

Update: 2022-12-01 20:27 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 30). இவருடைய மனைவி காஞ்சனா (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ஆனந்தராஜ் சொந்த ஊர் திரும்பினார். பின்னர் அவர் மது போதையில் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆனந்தராஜின் மாமனார் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆனந்தராஜ் கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி காஞ்சனா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்