மனைவியை தாக்கியவர் கைது

பேட்டையில் மனைவியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-08 19:24 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் தீன்நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45). மெக்கானிக்கான இவரது மனைவி வள்ளி (40). பாலகிருஷ்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், வீட்டிலிருந்த குத்து விளக்கால் வள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்