ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பஜனை கூட தெருவில் வசிப்பவர் வக்கீல் சந்திரசேகரன். இவர் சிவகாசியில் நடைபெறும் வழக்கிற்காக கோர்ட்டுக்கு செல்வதற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி செந்தாமரை லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.