ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை

ஓசூர் அருகே ஓட்டல் உரிமையாளரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

மத்திகிரி

ஓட்டல் உரிமையாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 31). ஓட்டல் உரிமையாளர். இவர். தளியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு உளிவீரனப்பள்ளி அருகே முரளி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மீது மீது மோதினர். இதில் முரளி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பரிதாப சாவு

பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர்கள் முரளியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்