சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற அண்ணன்

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-07-04 19:54 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சொத்து தகராறு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவருடைய மகன்கள் சமுத்திரம் (வயது 65), மாரிமுத்து (59). விவசாயி. தங்கச்சாமிக்கு சொந்தமாக எலுமிச்சை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை பிரித்ததில் அண்ணன், தம்பிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் மாரிமுத்து எலுமிச்சை செடிகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு சமுத்திரம் வந்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

அப்போது சமுத்திரம் மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், தாளமுத்து ஆகிய 3 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீேழ விழுந்தார்.

உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார், சமுத்திரம் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த தகராறில் மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்