ரெயிலில் ஏறும்போது தவறி விழுந்து தரகர் பலி

சேலம் அருகே ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்து மாட்டு தரகர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-10-08 20:56 GMT

சூரமங்கலம்:-

சேலம் அருகே ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்து மாட்டு தரகர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மாட்டு தரகர்

சேலம் அயோத்தியாப்பட்டணம் தெப்பக்குளம் தேரு ராமர் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 67). இவர். மாடு தரகர். இவர், நேற்று மதியம் கடலூரில் வள்ளலார் கோவிலுக்கு செல்வதற்காக ரெயிலில் அயோத்தியாப்பட்டணம் ெரயில் நிலையத்தில் நடைமேடையில் காத்திருந்தார்.

அப்போது ரெயில் வந்து நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. ரெயில் புறப்பட்டபோது செல்வம் ரெயிலில் ஏறியதாக தெரிகிறது.

பரிதாப சாவு

அப்போது தவறி பின்பக்கமாக நடைமேடையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்த டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். அங்கிருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்