குளத்தில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

வேதாரண்யத்தில் குளத்தில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2022-10-25 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் கீழசேது ரஸ்தா தெரு அருகில் உள்ள கற்பனாங் குளத்தில் நேற்று காலை 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேதாரண்யம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து குளத்தில் இருந்து உடலை மீட்டனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில், பிணமாக கிடந்தவர் வேதாரண்யம் சன்னதி தெருவை சேர்ந்த கர்ணன் (வயது45) என்பதும், தென்னை மரங்களில்தேங்காய் பறிக்கும் தொழிலாளி இவர், சம்பவத்தன்று குளத்தில் மீன் பிடித்த போது குளத்துக்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்