கோவில் வழிபாடு

கோவில் வழிபாடு

Update: 2023-09-08 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாற்றில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்