முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா

பொங்கலூர் அருகே அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

Update: 2023-01-30 18:01 GMT

பொங்கலூர் அருகே அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

பால தண்டாயுதபாணி கோவில்

பொங்கலூர் அருகே அலகுமலையில் முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூச தேரோட்டம் வருடம் தோறும் நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி செய்யப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.

அதனைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை தினசரி உபயதாரர்கள் சார்பாக சாமிதிருவீதி உலா நடைபெறும்.

பொங்கலூர் அருகே அலகுமலையில் உள்ள முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் சாமி திருத்தேர் ஏற்றமும், மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் வினீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன்,ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், அலகுமலை ஊராட்சித் தலைவர் தூயமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து 6-ந் தேதி மாலை பரிவேட்டையும், 7-ந் தேதி சாமி திருவீதி உலாவும், 8-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் கே.பி.சின்னு கவுண்டர் தலைமையில் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்