மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

சங்கரன்கோவிலில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தர்.

Update: 2023-03-27 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்திநகர் 2-ம் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மனோஜ் குமார் (வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மரத்தில் மோதி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்