இளம்பெண் தற்கொலை

Update: 2023-06-16 19:30 GMT

ஓசூர்:-

ஓசூர் பெரிய எலசகிரியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி அஸ்வினி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. அஸ்வினி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். அஸ்வினி வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடியதாகவும், அதுகுறித்து அறிந்த ராஜேஷ், அஸ்வினியை கண்டித்தார். மேலும், அஸ்வினியின் தாய் பாக்கியம்மாவிடமும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த அஸ்வினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாக்கியம்மா கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்தும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்