வாலிபர் தற்கொலை

வள்ளியூரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-20 19:16 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் வடக்கு ரவீதியை சேர்ந்த ரவிகுமார் மகன் முகேஷ்ராஜ் (வயது 27). இவர் வள்ளியூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பெற்றோர்கள் திருமணத்திற்காக பெண் பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண் முகேஷ்ராஜை பிடிக்கவில்லை என கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் முகேஷ்ராஜ் வாழ்க்கையில் விரக்தியடைந்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது முகேஷ்ராஜ் பூச்சி மருந்து எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ரவிகுமார் தனது மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்