நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Update: 2022-08-22 11:13 GMT

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை  சேர்ந்த  மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்