38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கல்

38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.

Update: 2023-09-19 18:35 GMT

 புகழூர் காகித ஆலை சார்பில் ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சேர்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2023-2024-ம் கல்வியாண்டில் காகித ஆலை நிர்வாகம் சார்பில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியில் படித்து வரும் ஓனவாக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த 38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி புகழூர் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் (இயக்கம்) சீனிவாசன், பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் கலந்து கொண்டு, 38 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்