நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

Update: 2023-08-23 20:02 GMT

பெரம்பலூர் மாவட்டத்தின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் போலீஸ் நிலைய பொறுப்பு போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், வேலுமணி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனிசாமி, சீராளன், தங்கவேல், வளவன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் போலீசாரின் வாகனங்கள் மாதாந்திர ஆய்வு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்