நாமக்கல்லில் கல்குவாரி மேலாளர் தற்கொலை

நாமக்கல்லில் கல்குவாரி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-26 17:40 GMT

நாமக்கல்:

நாமக்கல்லில் கல்குவாரி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலாளர்

நாமக்கல் குடிசைமாற்று வாரியம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). இவர் கல்குவாரி (கிரஷர்) ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கணேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து அவருடைய மனைவி கோமதி (34) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்