கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சினை: த.வெ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல்

இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-10-06 20:09 GMT

நாகப்பட்டினம்,

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர், கீழ்வேளூர், ஓர்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பெருங்கடம்பனூர் கடைத்தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் அருகே தமிழக வெற்றிக்கழகத்தினர், கொடிக்கம்பம் நடுவதற்காக வந்தனர்.

அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாரிமுத்து, இளங்கோ, துரை ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தமிழக வெற்றிக்கழக கொடியினை வேறு இடத்தில் ஏற்றிக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அருகில் உள்ள ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் புதிய கொடிகம்பம் நட்டு வைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்