தைலமரக்காட்டில் திடீர் தீ

தைலமரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-15 20:58 GMT

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பரம்பக்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான தைல மரக்காடுகள் உள்ளன. இப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தைலமர காட்டிற்குள் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இலை, செடி, கொடிகளை கொண்டு தீயை அணைத்தனர். இருப்பினும் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. மேலும், அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்