மரக்கடையில் திடீர் தீ விபத்து- எடப்பாடியில் பரபரப்பு

எடப்பாடியில் மரக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-31 22:41 GMT

எடப்பாடி:

மரக்கடையில் தீ

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் (வயது 34). இவர், எடப்பாடி பஸ் நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சேகர் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடையில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ பக்கத்து கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் மரக்கடையில் இருந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின்இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்