ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-27 19:06 GMT

விழுப்புரம் ராகவன்பேட்டை அண்ணா வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி இந்திரா (வயது 52). இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ராகவன்பேட்டைக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்துள்ளார். ராகவன்பேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர், தான் கொண்டு வந்த பையை பார்த்தபோது பர்சில் வைத்திருந்த 1¼ பவுன் நகை மற்றும் ரூ.5,600 ரொக்கம் ஆகியவை பர்சுடன் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள், இந்திரா வைத்திருந்த நகை, பணத்துடன் கூடிய பர்சை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இந்திரா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்