புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

கோமல் பாலக்கரை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.

Update: 2022-06-05 17:01 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் பாலக்கரை பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மின்அலங்கார தேர்பவனி நடந்தது. அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று மாந்தை பங்குத் தந்தை செல்வராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இறைமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. இதில் கோமல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோமல் கிராம தலைவர்கள், மற்றும் விழா குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்