தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-08-27 01:14 GMT

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்று இருக்கிறது.

கைதான மீனவர்களை அவர்களுடைய விசைப்படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்