அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2022-08-02 19:17 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில், செந்துறை கல்வி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. இப்போட்டியை செந்துறை கல்வி மாவட்ட அலுவலர் பேபி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தனிப்போட்டி மற்றும் குழு போட்டிகளில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு விளையாடினர். உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்